தன்னிச்சையான முடிவு! ஆர்த்தி ‘பகீர்’ குற்றச்சாட்டு!

மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு அக்டோபர் 10 தேதி மனுதாக்கல் செய்தார். பிறந்தநாளான நேற்று ஜெயம் ரவி, விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக, ஜெயம் ரவி வெளியிட்ட அறிக்கையில், ‘‘வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம். ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும், திரையல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும் திரை துறை நண்பர்கள், பத்திரிக்கை, ஊடக துறை மற்றும் சமுக ஊடக நண்பர்கள், என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன். எனவே, மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.

நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல. சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது. இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும் எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன். இந்த முடிவு எனது சொந்த முடிவாகும் இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்’’ என்று அதில் கூறியிருக்கிறார்.

விவாகரத்து குறித்து தன்னிச்சையாக நடிகர் ஜெயம் ரவி முடிவு செய்துள்ளார் என்று ஆர்த்தி கூறியுள்ளார். எனக்கும் குழந்தைகளுக்கும் தெரியாமல் என்னை பிரிய ரவி முடிவு எடுத்துள்ளார். கடந்த சில நாட்களாக சந்தித்து பேச முயற்சி செய்தும் ஜெயம் ரவியை தொடர்பு கொள்ள முடியவில்லை எங்களது திருமண வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் வெளியான அறிக்கையை பார்த்து மனவேதனை அடைந்தேன்.

நடிகர் ஜெயம் ரவி எடுத்த விவாகரத்து முடிவு குடும்ப நலனுக்காக எடுத்தது அல்ல என்று குற்றசாட்டியுள்ளார். மேலும் ஒரு நீண்ட அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறார் ஆர்த்தி. அதில் ஆர்த்தி ரவி என குறிப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

By R Priyu

Related Post